ADDED : ஜூன் 09, 2025 02:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளத்தை சேர்ந்த முருகன் மனைவி விஜயா, 52; மகன் கருத்தப்பாண்டி. விஜயாவை, முருகன் பிரிந்து சென்று விட்டார். விஜயா கருத்தபாண்டியுடன் வசித்தார்.
சில நாட்களுக்கு முன், வீட்டில் தீக்காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விஜயா திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்தவர் நேற்று இறந்தார்.
முன்னதாக அவரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர். அதில், தன் மீது ஒரு பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக தெரிவித்திருந்தார்.
தேவர்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.