ADDED : ஆக 17, 2024 09:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.பேட்டை:சோளிங்கர் அடுத்த மஞ்சூர் கண்டிகையை சேர்ந்தவர் பிச்சாண்டி, 58. இவர், ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மாலை மேய்ச்சலில் இருந்து ஆடுகளை வீட்டிற்கு ஓட்டிக்கொண்டு வந்துள்ளார். மஞ்சூர் கண்டிகை அருகே, சித்துார் சாலையில் வரும் போது, பொன்னை நோக்கி சென்ற கார் ஒன்று, ஆட்டு மந்தையில் புகுந்தது.
இதில், 22 ஆடுகள் சம்பவ இடத்திலேயே இறந்தன. ஐந்து ஆடுகள் படுகாயம் அடைந்தன. ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

