sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணியில் மாநில சிலம்பம் போட்டி தேசிய போட்டிக்கு 27 பேர் தேர்வு

/

திருத்தணியில் மாநில சிலம்பம் போட்டி தேசிய போட்டிக்கு 27 பேர் தேர்வு

திருத்தணியில் மாநில சிலம்பம் போட்டி தேசிய போட்டிக்கு 27 பேர் தேர்வு

திருத்தணியில் மாநில சிலம்பம் போட்டி தேசிய போட்டிக்கு 27 பேர் தேர்வு


ADDED : ஆக 18, 2024 11:14 PM

Google News

ADDED : ஆக 18, 2024 11:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: திருத்தணி அடுத்த அகூர் நத்தம் பகுதியில் உள்ள டி.ஆர்.எஸ்., குளோபல் பள்ளி வளாகத்தில், சிலம்பக் கோர்வை இந்தியா சார்பில், மாநில அளவிலான சிலம்பம் போட்டி நேற்று நடந்தது.

சிலம்ப கோர்வை இந்தியா தலைவர் செல்வம் தலைமை வகித்தார். தேசிய சிலம்ப பயிற்சியாளர் வெங்கடேஷ் வரவேற்றார்.

இதில் திருத்தணி பீகாக் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் கிரண், டி.ஆர்.எஸ்., குளோபல் பள்ளி செயலர் ரவிக்குமார் ஆகியோர் சிலம்பம் போட்டியை துவக்கி வைத்தனர். பள்ளி முதல்வர் கிறிஸ்டினா, சிலம்பக் கோர்வை இந்தியா பயிற்சியாளர் சதீஷ் பங்கேற்றனர்.

தமிழகத்தில் உள்ள, 38 மாவட்டங்களில் இருந்து, 10 வயது முதல், 17 வயது வரை உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து, 200 மாணவியர் உள்பட 600 மாணவர்கள் பங்கேற்றனர்.

சிலம்பம் ஆட்டம் தொடுமுறை, தனித்திறமை, இரட்டை கம்பு ஆகிய மூன்று பிரிவுகளில் மாணவர்கள் விளையாடினர்.

மூன்று பிரிவுகளிலும், ராணிப்பேட்டை மாவட்டம் முதலிடத்தையும், திருவள்ளூர் மாவட்டம் இரண்டாமிடத்தையும், காஞ்சிபுரம் மாவட்டம், மூன்றாமிடத்தையும், சென்னை மாவட்டம் நான்காம் இடத்தையும் பிடித்துள்ளன.

இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த, 27 மாணவர்கள் அடுத்த மாதம் ஹரியானா அல்லது பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.






      Dinamalar
      Follow us