sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கடம்பத்துார் ஒன்றியத்தில் 8 ஊராட்சி செயலர் பணியிடம் காலி: வரி வசூல் பணிகள் பாதிப்பு

/

கடம்பத்துார் ஒன்றியத்தில் 8 ஊராட்சி செயலர் பணியிடம் காலி: வரி வசூல் பணிகள் பாதிப்பு

கடம்பத்துார் ஒன்றியத்தில் 8 ஊராட்சி செயலர் பணியிடம் காலி: வரி வசூல் பணிகள் பாதிப்பு

கடம்பத்துார் ஒன்றியத்தில் 8 ஊராட்சி செயலர் பணியிடம் காலி: வரி வசூல் பணிகள் பாதிப்பு


ADDED : ஜூலை 05, 2024 08:48 PM

Google News

ADDED : ஜூலை 05, 2024 08:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்தில் 43 ஊராட்சிகள் உள்ளன.

இதில், திருமணிக்குப்பம், திருப்பந்தியூர், புதுவள்ளூர், வெள்ளேரிதாங்கல், தொடுகாடு, கூவம், இருளஞ்சேரி, கல்லம்பேடு ஆகிய எட்டு ஊராட்சிகளில், ஊராட்சி செயலர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதனால், ஊராட்சி பகுதிகளில் சாலை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்த ஊராட்சிகளில் அருகில் உள்ள ஊராட்சி செயலர், கூடுதல் பணி மேற்கொள்வதால் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

இதனால் ஊராட்சியில் அரசின் திட்டங்கள், தொகுப்பு வீடுகள், பிரதமர் மற்றும் கலைஞர் வீடு கட்டும் திட்டம், பழுதடைந்த வீடுகள் சீரமைப்பது உட்பட அடிப்படை தேவைகளுக்கு பகுதிவாசிகள் திணறி வருகின்றனர்.

மேலும் தற்போது ஆன்லைனில் வீடு மற்றும் தண்ணீர் வரி வசூல் செய்யும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 100 நாள் வேலையிலும் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும் ஊராட்சி செயலர்கள் புலம்பி வருகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us