ADDED : ஏப் 28, 2024 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பட்டு, : பள்ளிப்பட்டு அடுத்த சாணாகுப்பத்தை சேர்ந்தவர் மகேஷ்பாபு. இவரது மகன் சாகித், 10. ஆர்.கே.பேட்டை அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார்.
நேற்று காலை தன் விவசாய கிணற்றில், சாகித், நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். பிளாஸ்டிக் கேன் முதுகில் கட்டிக்கொண்டு பயிற்சியில் ஈடுபட்டபோது பிளாஸ்டிக் தனியே பிரிந்து சென்றதில் சாகித், நீரில் மூழ்கினார்.
இது குறித்து பள்ளிப்பட்டு தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள், சாகித்தை சடலமாக மீட்டனர். பள்ளிப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

