/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தாலுகா பஸ் நிறுத்தம் அருகில் புதிதாக வந்துள்ள காபி கடை
/
தாலுகா பஸ் நிறுத்தம் அருகில் புதிதாக வந்துள்ள காபி கடை
தாலுகா பஸ் நிறுத்தம் அருகில் புதிதாக வந்துள்ள காபி கடை
தாலுகா பஸ் நிறுத்தம் அருகில் புதிதாக வந்துள்ள காபி கடை
ADDED : பிப் 10, 2025 02:47 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் ரயில் நிலையம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி பகுதியில் இருந்து, திருப்பதி, திருத்தணி, பெரியபாளையம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஜே.என்.சாலை வழியாக பயணம் செய்கின்றன. இதில், ஆயில் மில் பகுதி, அரசு மருத்துவமனை, தாலுகா அலுவலகம், காமராஜர் சிலை மற்றும் நேதாஜி சாலையில் சாலையோர கடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.
இதனால், இச்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வந்தது. இதையடுத்து, பொதுமக்கள் புகாரை அடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர் இந்த ஆக்கிரமிப்புகளை் சில வாரத்திற்கு முன் அகற்றினர். அதன் பின் ஒரு வாரம் ஆக்கிரமிப்பு இல்லாத நிலையில், தற்போது, காமராஜர் சிலை அருகில் பூக்கடைகள் மீண்டும் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், தாலுகா அலுவலக பேருந்து நிறுத்தம் அருகில், புதிதாக காபி கடை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதற்காக, பயணியர் நிற்கும் இடத்தில் 'டேபிள்' அமைக்கப்பட்டு உள்ளது. இதனால், பயணியர் நிற்க இடமின்றி தவிப்பதுடன், தாலுகா அலுவலகத்திற்குள் வரும் வாகனங்கள் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன.
எனவே, நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி நிர்வாகம் இணைந்து, புதிதாக முளைத்துள்ள ஆக்கிரமிப்பினை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

