/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறுவன் உட்பட மூவரை கடித்த வெறிநாய்
/
சிறுவன் உட்பட மூவரை கடித்த வெறிநாய்
ADDED : ஆக 07, 2024 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் எஸ்.அக்ரஹாரம் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள தெருக்களில் ஏராளமான வெறி நாய்கள் சுற்றி திரிகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் வீதியில் சென்றவர்களை வெறிநாய் ஒன்று விரட்டி விரட்டி கடித்து குதறியுள்ளது.
இதில் எஸ்.அக்ரஹாரம் கிராமம் சேர்ந்த விவசாயி நாகேஷ், 35, சுரேஷ், 40, மற்றும் 12 வயது சிறுவன் ஆகிய மூவரை வெறிநாய் கடித்துள்ளன. மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.