ADDED : ஆக 21, 2024 09:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டையை சேர்ந்தவர் தியாகராஜன், 19. இவர் நேற்று முன்தினம் பாண்டரவேடு கிராமத்திற்கு, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
பாண்டரவேடு கூட்டு சாலை அருகே எதிரே வந்த டிராக்டர், இவர் மீது மோதியதில், தியாகராஜன் படுகாயம் அடைந்தார். உடன், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.