/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'குடி' மையமாக மாறிய பயணியர் நிழற்குடை
/
'குடி' மையமாக மாறிய பயணியர் நிழற்குடை
ADDED : செப் 08, 2024 12:56 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டது நார்த்தவாடா கிராமம். இப்பகுதியினர் அரக்கோணம் திருவள்ளூர் சென்னை திருவாலங்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து வாயிலாக சென்று வர திருவள்ளூர் ---அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில்,பேருந்து நிழற்குடைஅமைக்கப்பட்டுள்ளது.
காலை, 6:00 மணி முதல், இரவு, 10:30 மணி வரை, இந்த பேருந்து நிறுத்தத்தில் குறைந்தபட்சம், 20 பயணிகளாவது காத்திருப்பர்.
இந்நிலையில், பயணியர் வசதிக்காக ஊராட்சி நிர்வாகம் பேருந்து நிழற்குடை அமைத்துள்ளது. ஆனால், பயணிகளுக்காக அமைக்கப்பட்ட நிழற்குடையை, சில குடிமகன்கள் ஆக்கிரமித்து மது குடிக்கும் மையமாக மாற்றி உள்ளனர்.
பகல் நேரத்திலேயே சிலர், மது அருந்திவிட்டு, டம்ளர், வாட்டர் பாட்டிலை அங்கேயே போட்டுவிட்டு செல்வதால், பயணியர் அங்கு செல்வதற்கு அச்சப்படுகின்றனர். இதனால், பயணியர் மழையிலும், வெயிலும்பேருந்துவரும் வரை காத்திருந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.
இதுகுறித்து காவல் துறையினர் மற்றும் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணியர் எதிர்பார்க்கின்றனர்.