/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தவணை கட்ட முடியாமல் 'பை'க்கை எரித்த இளைஞர்
/
தவணை கட்ட முடியாமல் 'பை'க்கை எரித்த இளைஞர்
ADDED : ஜூன் 17, 2024 02:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி,:ஆவடி பருத்திப்பட்டு, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாசிலா, 65; ஆட்டோடிரைவர்.
இவரது மகன் முகேஷ், 33, வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார். இவர், நேற்று மதியம் மதுபோதையில், இருசக்கர வாகனத்திற்கு மாத தவணை செலுத்த, பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார்.
அவர்கள் பணம் தராததால் ஆத்திரமடைந்த முகேஷ், தன் 'ஹீரோ ஸ்பிளெண்டர்' ரக 'பைக்'கை, பருத்திப்பட்டு அருகே சாலையில் நிறுத்தி, பெட்ரோல் ஊற்றி கொளுத்தி உள்ளார்.
தகவலின்படி வந்த ஆவடி தீயணைப்பு துறையினர், 10 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் பைக் தீக்கிரையானது.
முகேஷை கைது செய்த ஆவடி போலீசார், அவரிடம் விசாரிக்கின்றனர்.