/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடி ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை
/
கும்மிடி ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை
ADDED : ஜூலை 09, 2024 06:29 AM
திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி சிப்காட் ஐ.டி.ஐ.,யில் நேரடி மாணவர் சேர்க்கை நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் கீழ் கும்மிடிப்பூண்டி, சிப்காட் வளாகத்தில் அரசினர் தொழிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, கடந்த 1 முதல் மாணவர் நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ -- மாணவியர், சர்வேயர், மெசினிஸ்ட், ரெப்ரிஜரேட்டர் மற்றும் ஏசி டெக்னீசியன், 'இன்பிளாண்ட் லாஜிஸ்டிக் அசிஸ்டென்ட்' போன்ற தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்று உடனடி வேலைவாய்ப்பு பெறலாம்.
பயிற்சியாளர்களுக்கு அரசு வழங்கும் அனைத்து சலுகையும் கிடைக்கும். பயிற்சிக் கட்டணம் இலவசம். வயது வரம்பு ஆண்களுக்கு 14- 40. மகளிருக்கு 14 முதல் உச்ச வயது வரம்பு இல்லை.
மேலும் விவரங்களுக்கு, ராஜலட்சுமி, முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், சிப்காட் வளாகம், கும்மிடிப்பூண்டி- 82487 38413, 88381 82450 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.