/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திரவுபதியம்மன் கோவிலில் அர்ஜூனன் தபசு
/
திரவுபதியம்மன் கோவிலில் அர்ஜூனன் தபசு
ADDED : மே 16, 2024 12:45 AM

திருத்தணி:திருத்தணி அடுத்த மேல்திருத்தணியில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த மாதம், 2ம் தேதி கொடியேற்ற த்துடன் துவங்கியது. தினமும் காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்து வருகிறது.
கடந்த, 9ம் தேதி சுபத்திரை திருக்கல்யாணம், 11ம் தேதி சுபத்திரை கல்யாணம் நடந்தது. நேற்று காலை அர்ஜூனன் தபசு நடந்தது. இதில் அர்ஜூனன், பனை மரத்தில் ஒவ்வொரு படிக்கும் ஒரு பாட்டு வீதம் பாடி ஏறி உச்சிக்கு சென்றார்.
அங்கு சிவபெருமானை நோக்கி தவம் புரிந்தார். அப்போது பனைமரத்தின் கீழ், பெண்கள் வணங்கி பூஜைகள் செய்து வழிப்பட்டனர். மேலும் சில பெண்கள் குழந்தை வரம் வேண்டி தரையில் படுத்து தியானம் செய்தனர்.
வரும் 18ம் தேதி கர்ண மோட்சம், 19ம் தேதி காலையில் துரியோதனன் படுகளம், மாலை, 6:00 மணிக்கு தீமிதி விழா நடக்கிறது. 20ம் தேதி தர்மர் பட்டாபிஷே கத்துடன் இந்தாண்டிற்கான தீமிதி விழா நிறைவு பெறுகிறது.