/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்
/
காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்
காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்
காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்
ADDED : ஜூலை 23, 2024 07:40 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட, 26 வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளது.
திருவள்ளூர் மாவட்ட காவல்துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 23 இருசக்கர வாகனம், 3 நான்கு சக்கர வாகனம் என, மொத்தம் 26 வாகனங்கள், வரும் 30ல் திருவள்ளூர் ஆயுதப்படை மைதானம் அருகே ஏலம் விடப்பட உள்ளது.
வாகனங்களை ஏலம் கேட்க வருவோர், முன் வைப்புகட்டணத் தொகையாக இருசக்கர வாகனத்திற்கு 1000, 4 சக்கர வாகனத்திற்கு 5000 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். அதற்கான 'டோக்கன்' அன்று காலை 8:00-10:00 மணிவரை வழங்கப்படும்.
வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் கேட்ட தொகையுடன் இரு சக்கர வாகனத்திற்க்கு அரசு விற்பனைவரி 12 சதவீதம், 4 சக்கர வாகனத்திற்கு 18 சதவீதம் உடனடியாக செலுத்த வேண்டும். வாகனத்தின் விவரம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச மதிப்பீட்டு தொகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தகவல் அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.