sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தடையை மீறும் விசைப்படகுகள் பழவேற்காடில் சிறைபிடிக்க முடிவு

/

தடையை மீறும் விசைப்படகுகள் பழவேற்காடில் சிறைபிடிக்க முடிவு

தடையை மீறும் விசைப்படகுகள் பழவேற்காடில் சிறைபிடிக்க முடிவு

தடையை மீறும் விசைப்படகுகள் பழவேற்காடில் சிறைபிடிக்க முடிவு


ADDED : ஜூலை 06, 2024 01:47 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழவேற்காடு:பழவேற்காடு மீனவ பகுதியில், 15 மீனவ கிராமத்தினர் கடலில் மீன்பிடி தொழில் செய்கின்றனர். இந்நிலையில், கடந்த சில தினங்களாக, ஆந்திர மாநிலம், புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பிற கடலோர மாவட்டங்களில் இருந்து விசைப்படகுகளில் வரும் மீனவர்கள், கடற்கரைக்கு அருகில் உள்ள பகுதிகளில், மீன்பிடி தொழில் செய்கின்றனர்.

விசைப்படகுகள் கடற்கரை பகுதியில் இருந்து, 12 நாட்டிக்கல் மைல் தொலைவிற்கு அப்பால், மீன்பிடி தொழில் செய்யவும், இரட்டை மடி வலைகளை பயன்படுத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும், கடற்கரை அருகே மற்றும் பைபர் படகுகள் தொழில் செய்யும் இடங்களிலும், விசைப்படகுகள் வரக்கூடாது என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

கட்டுப்பாடுகளை மீறி விசைப்படகுகள் பழவேற்காடு கடற்கரை அருகிலேயே மீன்பிடி தொழில் செய்கின்றன.

இதனால் பழவேற்காடு பகுதி மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்யும் இடங்களில், மீன்வளம் குறைந்து, வருவாய் இழப்பிற்கு ஆளாகி உள்ளனர்.

இது தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் அந்தந்த மாவட்ட மீனவ சங்க நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

இனி காத்திருப்பதில் பயனில்லை என்பதால், கட்டுப்பாடுகளை மீறி மீன்பிடி தொழிலில் ஈடுபடும் விசைப்படகுகளை சுற்றிவளைத்து, சிறைபிடிக்க திட்டமிட்டு உள்ளனர்.

கடந்த, 2021, அக்டோபர் மாதம், 26ம் தேதியும் இதேபோன்று, 100க்கும் அதிகமான பைபர் படகுகளில், மீனவர்கள் விசைப்படகுகளை சிறைபிடிக்க கடலுக்குள் சென்றதால், பழவேற்காடில் பதற்றம் நிலவியது.

இரு தரப்பு மீனவர்களுக்குள் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. மீனவர்களிடம் 'வாக்கி டாக்கி' வாயிலாக அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.

இச்சம்பவத்திற்கு பின், சிறிதுகாலம் விசைப்படகுகள் கடற்கரை பகுதிகளில் தொழில் செய்வதை தவிர்த்தன. தற்போது மீண்டும் அவை தடையை மீறி தொழில் செய்வதால், அவற்றை சிறைபிடிக்க மீனவர்கள்திட்டமிட்டு உள்ளனர்.

மீன்வளத்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து, பைபர் - விசைப்படகு மீனவர்களுக்குள் மோதல் போக்கு ஏற்படுவதை தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us