sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நாயை அடித்து கொன்று 4 சவரன் திருட்டு

/

நாயை அடித்து கொன்று 4 சவரன் திருட்டு

நாயை அடித்து கொன்று 4 சவரன் திருட்டு

நாயை அடித்து கொன்று 4 சவரன் திருட்டு


ADDED : ஆக 01, 2024 11:26 PM

Google News

ADDED : ஆக 01, 2024 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி:பொன்னேரி அடுத்த வேம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி சுமதி, 49. கடந்த, மே மாதம் கணவர் இறந்த நிலையில், சுமதி தனியாக வசித்து வருகிறார். வீட்டின் அருகிலேயே சிறியதாக மளிகை கடை வைத்துள்ளார்.

கடந்த, 29ம் தேதி, சொந்த ஊரான கும்பகோணத்திற்கு சென்று விட்டு, நேற்று காலை, வீட்டிற்கு திரும்பியபோது, வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டார்.

உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த, நான்கு சவரன் நகை, இரண்டரை கிலோ வெள்ளி, உண்டியல் பணம் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரிந்தது.

மேலும், இவர் வளர்த்த வந்த நாய் ஒன்றும் வீட்டின் பின்புறம் ரத்தகாயங்களுடன் இறந்து கிடந்தது. நள்ளிரவில் திருட்டிற்கு வந்த நபர்கள், இடையூறு ஏற்படுத்திய நாயை அடித்து கொன்றிருக்கலாம் என தெரிகிறது.

இது குறித்து சுமதி, நேற்று பொன்னேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்படி , போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us