sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கடலில் மாயமான மீனவர் சடலம் 4 நாட்களுக்கு பின் கண்டெடுப்பு

/

கடலில் மாயமான மீனவர் சடலம் 4 நாட்களுக்கு பின் கண்டெடுப்பு

கடலில் மாயமான மீனவர் சடலம் 4 நாட்களுக்கு பின் கண்டெடுப்பு

கடலில் மாயமான மீனவர் சடலம் 4 நாட்களுக்கு பின் கண்டெடுப்பு


ADDED : ஜூன் 05, 2024 01:17 AM

Google News

ADDED : ஜூன் 05, 2024 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழவேற்காடு:பழவேற்காடு, திருமலைநகர் மீனவ பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகன் பிரேம்குமார், 32; மீனவர். இவர், கடந்த 31ம் தேதி தனது தந்தை மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோருடன் கடலில் மீன்பிடிக்க படகில் சென்றார்.

திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில், நிலைதடுமாறி படகில் இருந்து கடலில் விழுந்து, நீரில் மூழ்கி மாயமானார். கடலில் விழுந்து மாயமான பிரேம்குமாரை தேடும் பணியில், மீனவர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து, நான்கு நாட்களாக பிரேம்குமாரை தேடி வந்தனர்.

நேற்று காலை பழவேற்காடு அடுத்த காட்டுப்பள்ளி எல் அண்ட் டி துறைமுகத்தின் கிழக்கு திசையில் கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் சிலர், ஆண் சடலம் ஒன்று கடலில் மிதந்த நிலையில் இருப்பதை கண்டனர்.

இதுகுறித்து 'வாக்கி டாக்கி' வாயிலாக அனைத்து மீனவ கிராமங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக, திருமலைநகர் மீனவ கிராமத்தினர், சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை மீட்டபோது, மாயமான பிரேம்குமார் என்பது தெரிந்தது.

கரைக்கு கொண்டு வரப்பட்ட பிரேம்குமாரின் உடலை, திருப்பாலைவனம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us