sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மூளைச்சாவு அடைந்த ஆட்டோ ஓட்டுனர் உறுப்பு தானம்

/

மூளைச்சாவு அடைந்த ஆட்டோ ஓட்டுனர் உறுப்பு தானம்

மூளைச்சாவு அடைந்த ஆட்டோ ஓட்டுனர் உறுப்பு தானம்

மூளைச்சாவு அடைந்த ஆட்டோ ஓட்டுனர் உறுப்பு தானம்


ADDED : ஜூலை 06, 2024 01:31 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 01:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஊராட்சி அண்ணா நகரைச் சேர்ந்தவர், சிவசங்கர் 28. இவர், ஆட்டோ ஓட்டி வந்தார்.

கடந்த 2ம் தேதி மாலை திருவள்ளூர் அடுத்த நாராயணபுரத்திற்கு தன் டி.வி.எஸ்., ஜூபிட்டர் இருசக்கர வாகனத்தில் சென்றார். திருவாலங்காடு பி.டி.ஓ., அலுவலகம் எதிரே உள்ள வேகத்தடை மீது ஏறி இறங்கிய போது நிலைத்தடுமாறி விழுந்தார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்தவர் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 3ம் தேதி மூளைச்சாவு அடைந்தார்.

இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய, உறவினர்கள் முன்வந்தனர்.

நேற்று முன்தினம், சிவசங்கரின் இரண்டு சிறுநீரகங்கள், ஒரு கல்லீரல் உட்பட மூன்று உறுப்புகள் அதே மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன.

இதையடுத்து நேற்று உறவினர்களிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது. திருத்தணி ஆர்.டி.ஓ., தீபா, தாசில்தார் மதியழகன் உள்ளிட்ட அதிகாரிகள் சிவசங்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us