/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம்
/
அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம்
ADDED : ஜூன் 29, 2024 08:09 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் முதல்வர் காலை உணவு திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தொடங்குவது குறித்த அனைத்து துறை அலுவலர் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:
முதல்வரின் காலை உணவு திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் விரைவில் துவக்கப்பட உள்ளது. எனவே, சமையற்கூடம், மாணவர்களுக்கு வழங்கப்படும் தட்டு, டம்ளர் முதலியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இப்பணியை அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், மகளிர் திட்ட இயக்குனர் செல்வராணி, உதவி கலெக்டர் - பயிற்சி ஆயுஷ்குப்தா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.