sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சொத்து தகராறில் அண்ணனை கத்தியால் குத்திய தம்பி கைது

/

சொத்து தகராறில் அண்ணனை கத்தியால் குத்திய தம்பி கைது

சொத்து தகராறில் அண்ணனை கத்தியால் குத்திய தம்பி கைது

சொத்து தகராறில் அண்ணனை கத்தியால் குத்திய தம்பி கைது


ADDED : ஜூலை 30, 2024 06:46 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் சீனிவாசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் தேவேந்திரன், 36. இவரது தம்பி அரி, 32.

இவர்கள் இருவருக்கும் திருமணம் முடித்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில். சகோதரர்களுக்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு கிராமத்திற்கு அருகே மாந்தோப்பில் அரி இருந்துள்ளார், இதை கண்ட தேவேந்திரன், 'எனக்கு சேர வேண்டிய சொத்தை என் பெயருக்கு எழுதி வை' என கேட்டுள்ளார்.

இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அரி, மறைத்து வைத்திருந்த கத்தியால், தேவேந்திரனின் முதுகில் இரண்டு இடங்களில் குத்தினார்.

இதில், பலத்த காயமடைந்த தேவேந்திரன் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதுகுறித்து தேவேந்திரன் அளித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us