ADDED : மார் 05, 2025 08:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி;கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில், நேற்று அதிகாலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, சென்னை நோக்கி சென்ற ஆந்திர மாநில அரசு பேருந்தை நிறுத்தி பயணியர் உடைமைகளை சோதனையிட்டனர்.
அதில் பயணித்த சென்னை, அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார், 32, என்பவரிடம் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார், சரவணகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.