/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வாலிபரை தாக்கிய இருவர் மீது வழக்கு
/
வாலிபரை தாக்கிய இருவர் மீது வழக்கு
ADDED : பிப் 21, 2025 08:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போளிவாக்கம்:கடம்பத்துார் ஒன்றியம் போளிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அமுல்ராஜ், 43. இவர் கடந்த 17 ம் தேதி அப்பகுதியில் பொன்னியம்மன் கோவில் அருகே அமர்ந்திருந்தார்.
அப்போது அங்கு குடிபோதையில் வந்த சூர்யா, 26, அஜீத்குமார், 25 ஆகிய இருவரும் அமுல்ராஜை தாக்கினர். இதுகுறித்து மணவாளநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.