sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ரேஷன் கடை பணிக்காக நிழற்குடைக்கு மூடுவிழா

/

ரேஷன் கடை பணிக்காக நிழற்குடைக்கு மூடுவிழா

ரேஷன் கடை பணிக்காக நிழற்குடைக்கு மூடுவிழா

ரேஷன் கடை பணிக்காக நிழற்குடைக்கு மூடுவிழா


ADDED : மார் 06, 2025 02:32 AM

Google News

ADDED : மார் 06, 2025 02:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பட்டு, பள்ளிப்பட்டு ஒன்றியம் கோணசமுத்திரம் கிராமத்தில், 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

அத்திமாஞ்சேரிபேட்டையில் இருந்து கொத்தகுப்பம் வழியாக பொதட்டூர்பேட்டை செல்லும் மார்க்கத்தில், இக்கிராமம் அமைந்துள்ளது.

சோளிங்கரில் இருந்து பொதட்டூர்பேட்டை செல்லும் பேருந்துகள், கோணசமுத்திரம் பேருந்துநிறுத்தத்தில் நின்றுசெல்கின்றன. அரசு பேருந்து தடம் எண்: டி27, பல ஆண்டுகளாக கோணசமுத்திரத்தில் இருந்து திருத்தணிக்கு இயக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கோணசமுத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே பாழடைந்து கிடந்த ரேஷன் கடை கட்டடம் இடித்து அகற்றப்பட்டு, அதே பகுதியில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணிக்காக, அருகே உள்ள நிழற்குடை இரும்பு தகடுகளால் மூடப்பட்டுள்ளது.

இதனால், பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். கட்டுமான பணிக்கான பொருட்களை வேறு இடத்தில் வைக்கவும், நிழற்குடையை பயணியர் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us