sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நம்பாக்கம் சாலை அமைப்பதில் தாமதம்

/

நம்பாக்கம் சாலை அமைப்பதில் தாமதம்

நம்பாக்கம் சாலை அமைப்பதில் தாமதம்

நம்பாக்கம் சாலை அமைப்பதில் தாமதம்


ADDED : மே 29, 2024 12:25 AM

Google News

ADDED : மே 29, 2024 12:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:பூண்டி- நம்பாக்கம் சாலையில், சேதமடைந்த சாலையை சீரமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டி, ஒரு மாதமாகியும் சாலை அமைக்காததால், கிராமவாசிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

கடும் சிரமம்


திருவள்ளூர் தாலுகா, பூண்டி ஒன்றியத்தில், 49 கிராம ஊராட்சிகள் உள்ளன. பிளேஸ்பாளையம், மேட்டுப்பாளையம், ராமஞ்சேரி உள்ளிட்ட, 23க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து, இரண்டு சாலைகள் வழியாக பேருந்துகளும், கிராமவாசிகளின் கார், இருசக்கர வாகனங்களும் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், பூண்டி நீர்த்தேக்க கிருஷ்ணா கால்வாயில் இருந்து நம்பாக்கம் சாலை, குண்டும் குழியுமாக இருந்ததால், கிராமவாசிகள் கடும் சிரமப்பட்டனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, நெடுஞ்சாலை துறையினர் கடந்த ஒரு மாதத்திற்கு முன், சாலை சீரமைக்க, ஜல்லிக்கற்கள் கொட்டினர்.

ஆனால், இதுவரை பணி துவக்கப்படாமல் உள்ளது. பூண்டியில் இருந்து ரங்காபுரம் வரை 3 கி.மீ., வரை சாலை சீரமைக்காததால், பேருந்து மற்றும் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.

எனவே, நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கவரைப்பேட்டையில் உள்ள முக்கிய தெருக்களில் முதன்மையான தெருவாக கருதப்படுவது ராஜா தெரு. அதன் சாலை வழியாக கவரைப்பேட்டை ரயில் நிலையம், அருள் நகர், தியாகராய தெரு, சண்முகா நகர் செல்ல வேண்டும்.

தினசரி ஆயிரக்கணக்கானோர், ராஜா தெரு சாலையை பயன்படுத்தி வருகின்றனர். கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாக பராமரிப்பில் உள்ள அந்த சாலை, 2019ம் ஆண்டு தார் சாலையாக புதுப்பிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மழை வெள்ளத்தின் போது அந்த தார் சாலை முற்றிலும் தேசமடைந்தது. தற்போது போக்குவரத்துக்கு லாயக்கற்று குண்டும் குழியுமாக மாறியுள்ளது.

கோரிக்கை


அந்த சாலையை கடந்து செல்லும் குடியிருப்புவாசிகளும், ரயில் பயணியரும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகம் உடனடியாக நிதி ஒதுக்கி, கவரைப்பேட்டை ராஜா தெருவை கான்கிரீட் சாலையாக புதுப்பிக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us