/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆக்கிரமிப்புகளால் குறுகிய சாலை விரிவாக்கம் செய்ய கோரிக்கை
/
ஆக்கிரமிப்புகளால் குறுகிய சாலை விரிவாக்கம் செய்ய கோரிக்கை
ஆக்கிரமிப்புகளால் குறுகிய சாலை விரிவாக்கம் செய்ய கோரிக்கை
ஆக்கிரமிப்புகளால் குறுகிய சாலை விரிவாக்கம் செய்ய கோரிக்கை
ADDED : ஜூலை 23, 2024 01:03 AM
கும்மிடிப்பூண்டி, சென்னை --- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த பாலகிருஷ்ணாபுரம் சந்திப்பில் இருந்து புதுகும்மிடிப்பூண்டி வரையிலான இரண்டரை கிலோ மீட்டர் சாலை, மாநில நெடுஞ்சாலை துறையினர் பராமரிப்பில் உள்ளது.
அந்த சாலை வழியாக தினசரி, ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடந்து செல்கின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் அந்த சாலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்கள் ஸ்தம்பித்து போக்குவரத்து பாதிக்கிறது.
பிற நேரங்களில் அந்த சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
தற்போது பயன்பாட்டில் உள்ள, 20 அடி அகல சாலை போதுமானதாக இல்லை. எதிர் எதிரே இரு கனரக வாகனங்கள் கடக்க முடியாத நிலையில் உள்ளது. மேலும், சாலையோர ஆக்கிரமிப்புகள் ஏராளமாக இருப்பதால் சாலையை விட்டு இறங்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என, பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மாநில நெடுஞ்சாலை துறையினர், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுகும்மிடிப்பூண்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.