ADDED : ஜூலை 26, 2024 08:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் அதிகத்துார் ஊராட்சியில் 2 வயது பெண் குழந்தைக்கு கடந்த சில தினங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தது.
திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சுகாதார துறையினர் அதிகத்துார் பகுதியில் டெங்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.