/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடிப்பூண்டி ஐ.டி.ஐ.,யில் மாணவர் நேரடி சேர்க்கை
/
கும்மிடிப்பூண்டி ஐ.டி.ஐ.,யில் மாணவர் நேரடி சேர்க்கை
கும்மிடிப்பூண்டி ஐ.டி.ஐ.,யில் மாணவர் நேரடி சேர்க்கை
கும்மிடிப்பூண்டி ஐ.டி.ஐ.,யில் மாணவர் நேரடி சேர்க்கை
ADDED : ஆக 09, 2024 12:48 AM
திருவள்ளூர்:கும்மிடிப்பூண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் கீழ் திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, சிப்காட் வளாகத்தில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் துவங்கப்பட்டு உள்ளது. இங்கு, ஜூலை 1 முதல், நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ - மாணவியர் சர்வேயர், மெசனிஸ்ட், ரெப்ரிஜிரேட்டர் மற்றும் ஏசி டெக்னீசியன் மற்றும் 'இன்பிளாண்ட் லாஜுஸ்டிக் அசிஸ்டன்ட்' போன்ற தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்று உடனடி வேலைவாய்ப்பு பெறலாம்.
இங்கு பயிலும் பயிற்சியாளர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் அனைத்தும் வழங்கப்படும். வயது வரம்பு 14 - 40 வரை. மகளிருக்கு 14 வயது முதல் உச்ச வயது வரம்பு இல்லை.
நேரடி சேர்க்கை பெற விரும்பும் மாணவ - மாணவியர் கும்மிடிப்பூண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராஜலட்சுமியை நேரடியாகவும், 82487 38413, 88381 82450 ஆகிய 'மொபைல்' வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.