/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாழடைந்த கட்டடத்தில் வட்டார கல்வி அலுவலகம்
/
பாழடைந்த கட்டடத்தில் வட்டார கல்வி அலுவலகம்
ADDED : ஜூன் 02, 2024 12:28 AM

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், பாழடைந்த கட்டடத்தில் வட்டார கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பழமையான இந்த கட்டடம் பொலிவிழந்து காணப்படுகிறது.
கட்டடத்தின் பின்புறம் புதர் மண்டியும், கூரை 30 ஆண்டுகளை கடந்து தரமற்ற நிலையில் உள்ளது. இந்த அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும்ஊழியர்கள், ஆவணங்களை பாதுகாக்க போதிய இடவசதி இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
பள்ளிப்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட, 33 ஊராட்சிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், பல்வேறு பணிகள் காரணமாக இந்த அலுவலகத்திற்கு வரும் போது காத்திருக்க போதிய இடவசதி இன்றி தவிக்கின்றனர்.
எனவே, வட்டார கல்வி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.