/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாவட்ட அளவிலான 'அத்லெட்டிக்' போட்டி
/
மாவட்ட அளவிலான 'அத்லெட்டிக்' போட்டி
ADDED : ஆக 14, 2024 11:08 PM
திருவள்ளூர்:மாவட்ட விளையாட்டு மைதானத்தில், வரும் 23 மற்றும் 24ம் தேதிகளில், மாவட்ட அளவிலான 'அத்லெட்டிக்' போட்டி நடக்கிறது.
திருவள்ளூர் மாவட்ட 'அத்லெட்டிக்' சங்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்ட 'அத்லெட்டிக்' சங்கம் சார்பில், 15வது ஜூனியர் 'அத்லெட்டிக்' போட்டிகள், வரும், 23 மற்றும் 24 ஆகிய இரு நாட்கள், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.
ஓட்டம், நீளம், உயரம் தாண்டுதல், எறிபந்து ஆகிய போட்டிகள், 8, 10, 12, 14, 16, 18 மற்றும் 20 வயது வாரியாகவும், மற்றும் அனைத்து வயதினரும் பங்கேற்கும் போட்டி என, தனித்தனியாக நடத்தப்படும். வரும் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்போட்டிகளில் வெற்றி பெறுவோர், அடுத்த மாதம் ஈரோட்டில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பர். மேலும், விபரங்களுக்கு, சங்கத்தின் செயலர் மோகன்பாபுவை, 95661 98156 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.