/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஹிந்தி எழுத்தை அழித்த தி.மு.க.,வினர் திருத்தணியில் கைது
/
ஹிந்தி எழுத்தை அழித்த தி.மு.க.,வினர் திருத்தணியில் கைது
ஹிந்தி எழுத்தை அழித்த தி.மு.க.,வினர் திருத்தணியில் கைது
ஹிந்தி எழுத்தை அழித்த தி.மு.க.,வினர் திருத்தணியில் கைது
ADDED : பிப் 24, 2025 11:58 PM

திருத்தணி, தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு தி.மு.க., தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தும், ஹிந்து மொழியை கற்கக் கூடாது என, பல்வேறு போராட்டங்கள் அவரது தலைமையில் கட்சியினர் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி அமைப்பாளர் கிரண் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர், நேற்று மதியம், திருத்தணி ரயில் நிலையத்திற்கு வந்து மும்மொழி கொள்ளைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
அதை தொடர்ந்து, முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆகிய நடைமேடைகளில் வைக்கப்பட்டுள்ள ரயில் நிலைய பெயர் பலகையில் எழுதப்பட்டிருந்த ஹிந்து மொழியை மட்டும் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கிரண் கருப்பு மையால் பெயர் பலகையில் அழித்தார்.
அரக்கோணம் ரயில்வே போலீசார் மற்றும் திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் தலைமையில், 15க்கும் மேற்பட்ட போலீசார் ரயில் நிலையத்திற்கு சென்று, ஹிந்து மொழியை அழித்த தி.மு.க., மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கிரண் உட்பட, 20 நிர்வாகிகளை கைது செய்து, திருத்தணி அக்கைய்யநாயடு சாலையில் உள்ள காவலர்கள் தங்கும் விடுதிக்கு, நடந்தே அழைத்து செல்லப்பட்டனர்.
திருத்தணி போலீசார் வழக்கு பதிந்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

