sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருமழிசை தலைவர் பதவிக்கு திராவிட கட்சிகள் மல்லுக்கட்டு பா.ஜ., - பா.ம.க., ஆதரவு யாருக்கு?

/

திருமழிசை தலைவர் பதவிக்கு திராவிட கட்சிகள் மல்லுக்கட்டு பா.ஜ., - பா.ம.க., ஆதரவு யாருக்கு?

திருமழிசை தலைவர் பதவிக்கு திராவிட கட்சிகள் மல்லுக்கட்டு பா.ஜ., - பா.ம.க., ஆதரவு யாருக்கு?

திருமழிசை தலைவர் பதவிக்கு திராவிட கட்சிகள் மல்லுக்கட்டு பா.ஜ., - பா.ம.க., ஆதரவு யாருக்கு?


ADDED : ஜூலை 31, 2024 11:36 PM

Google News

ADDED : ஜூலை 31, 2024 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருமழிசை பேரூராட்சியில், கடந்த 2022ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் 1, 6, 7, 13, 14, 15 என, ஆறு வார்டுகளை அ.தி.மு.க.,வும், 3, 4, 5, 8, 10, 12 ஆகிய ஆறு வார்டுகளை தி.மு.க.,வும் கைப்பற்றின.

இரண்டாவது வார்டை ம.தி.மு.க.,வும், ஒன்பதாவது வார்டை பா.ம.க.,வும், 11வது வார்டை சுயேச்சையும் கைப்பற்றினர்.

இதில், தி.மு.க., கூட்டணி ஏழு இடங்களையும், அ.தி.மு.க., ஆறு இடங்களையும் அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து தனித்து போட்டியிட்ட பா.ம.க., ஒரு வார்டையும், சுயேச்சையாக 11வது வார்டில் போட்டியிட்டவர் வெற்றி பெற்று பா.ஜ.,வில் இணைந்தார்.

இதில், பேரூராட்சியில் நடந்த மறைமுக தேர்தலில், தி.மு.க.,வைச் சேர்ந்த வடிவேல் தலைவராகவும், மகாதேவன் துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த மே மாதம் தி.மு.க., பேரூராட்சி தலைவர் வடிவேல் விபத்தில் உயிரிழந்தார்.

இதையடுத்து, துணை தலைவர் மகாதேவன் பொறுப்பு தலைவராக பதவி வகித்து வருகிறார். ஆக., 6ம் தேதி தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால், தலைவர் பதவிக்கு தி.மு.க., - அ.தி.மு.க,வினரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போது அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகள், தலா ஆறு வார்டுகளுடன் சரிசமமாக உள்ள நிலையில், வரும் 6ம் தேதி நடைபெற உள்ள தலைவர் பதவிக்கான தேர்தலில், பா.ம.க., பா.ஜ.க., ஆதரவு அளிக்கும் கட்சியே தலைவர் பதவியை கைப்பற்றும் என்பதால், திருமழிசையில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

'கூட்டணியே வேண்டாம்; தனித்து போட்டியிடுவோம்' என, தி.மு.க., - அ.தி.மு.க., தலைமை கூறி வரும் நிலையில், பேரூராட்சி தலைவர் பதவிக்கே ஆதரவு இருந்தால் தான் ஜெயிக்க முடியும் என, இரு கட்சியினரும் தவித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us