ADDED : பிப் 21, 2025 08:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி ஒன்றியம் கார்த்திகேயபுரம் பி.டி.புதூர் அருகே மாநில நெடுஞ்சாலையோரம், 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு இறந்து கிடந்தார்.
நேற்று காலை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து திருத்தணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சடலத்தை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் இறந்தவர் திருத்தணி முருகப்பநகர் பகுதி சேர்ந்த, தட்சிணாமூர்த்தி,63 என தெரிய வந்தது.

