sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அனுமதித்த அளவைவிட அதிகம் மணல் எடுப்பு: கலெக்டரிடம் புகார்

/

அனுமதித்த அளவைவிட அதிகம் மணல் எடுப்பு: கலெக்டரிடம் புகார்

அனுமதித்த அளவைவிட அதிகம் மணல் எடுப்பு: கலெக்டரிடம் புகார்

அனுமதித்த அளவைவிட அதிகம் மணல் எடுப்பு: கலெக்டரிடம் புகார்


ADDED : ஜூலை 03, 2024 01:07 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 01:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை தாலுகா, பாலவாக்கம் ஏரியில் அதிகளவு மணல் எடுப்பதை தடுக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் தலைவர் ஆஞ்சநேயலு, துணைத்தலைவர் ஞானப்பழனி உள்ளிட்ட குழுவினர் கலெக்டரிடம் மனு வழங்கினர்.

மனுவில் கூறியிருப்பதாவது:

தச்சூர் பகுதியில் இருந்து ஆந்திர மாநிலம் சித்துார் வரை ஆறுவழிச் சாலை பணி நடந்து வருகிறது. இந்த சாலை பணிக்காக ஊத்துக்கோட்டை தாலுகா, பாலவாக்கம் ஏரியில் இருந்து மணல் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

ஆனால் இங்கு அரசு விதிமுறையை மீறி அதிகளவு ஆழத்தில் மணல் எடுக்கப்படுகிறது. இதனால் நீர்மட்டம் பாதித்து குடிநீர் பிரச்னை ஏற்படும் நிலை உள்ளது.

இங்கிருந்து மணல் எடுத்து செல்லும் லாரிகள் அசுர வேகத்தில் செல்வதால், அவ்வழியே உள்ள பள்ளிகளில் இருந்து வெளியே வர மாணவர்கள் அச்சப்படுகின்றனர். விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஏரியில் இருக்கும் பனைமரங்கள் சூறையாடப்படுகின்றன. ஏரியில் இருந்து எத்தனை லாரிகள் மணல் எடுத்து செல்கிறது என்ற கணக்கு எதுவும் இல்லை. எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து, மணல் எடுப்பதை தடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us