/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஐ.டி.ஐ.,ல் மாணவர் சேர்க்கை 16 வரை அவகாசம் நீட்டிப்பு
/
ஐ.டி.ஐ.,ல் மாணவர் சேர்க்கை 16 வரை அவகாசம் நீட்டிப்பு
ஐ.டி.ஐ.,ல் மாணவர் சேர்க்கை 16 வரை அவகாசம் நீட்டிப்பு
ஐ.டி.ஐ.,ல் மாணவர் சேர்க்கை 16 வரை அவகாசம் நீட்டிப்பு
ADDED : ஆக 05, 2024 11:33 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், மாணவ, மாணவியர் சேர்க்கை வரும் 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், நடப்பு 2024- -25ம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை வரும் 16 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம்.
எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் ஓராண்டு மற்றும் இரண்டாண்டு பயிற்சியில் சேர்ந்து உடனடி வேலைவாய்ப்பு பெற்று பயனடையலாம்.
மேலும், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. அரசு வழங்கும் அனைத்து சலுகைகளும் கிடைக்கும்.
கூடுதல் விவரம் பெற, உதவி இயக்குனர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், திருவள்ளூர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது ricentreambattur@gmail.com என்ற இ- மெயில் மற்றும் 94442 24363, 94869 39263 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.