ADDED : மார் 11, 2025 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை அருகே தண்டலச்சேரி கிராமத்தில் வசித்தவர் ரமேஷ்பாபு, 57. நேற்று முன்தினம் நள்ளிரவு, வீட்டின் சிலாப்பில் இருந்த பொருளை எடுப்பதற்காக, கட்டில் மீது ஏறினார்.
அப்போது, தவறி விழுந்தவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவு இழந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவேஉயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கவரைப்பேட்டை போலீசார்விசாரித்து வருகின்றனர்.