sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நட்டேரியில் பலமிழந்த மதகு விவசாயிகள் கவலை

/

நட்டேரியில் பலமிழந்த மதகு விவசாயிகள் கவலை

நட்டேரியில் பலமிழந்த மதகு விவசாயிகள் கவலை

நட்டேரியில் பலமிழந்த மதகு விவசாயிகள் கவலை


ADDED : ஜூலை 15, 2024 11:09 PM

Google News

ADDED : ஜூலை 15, 2024 11:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு: தக்கோலம் -- கனகம்மாசத்திரம் மாநில நெடுஞ்சாலை திருவாலங்காடில் அமைந்துள்ளது நட்டேரி. நீர்வளத்துறை கீழ் வரும் இந்த ஏரி 29 ஏக்கர் பரப்பளவிலானது. இந்த ஏரி நீரின் வாயிலாக 200 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஒருவாரமாக பெய்த கனமழையின் போது ஏரியில் நீர் முழுதும் நிரம்பியது. இந்நிலையில் ஏற்கனவே மதகு சேதமடைந்த நிலையில் தற்காலிக மணல் மூட்டைகள் நிரப்பி சீரமைத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று மதியம் மதகு வழியாக நீர் கசிந்து வெளியேறி வருகிறது. இதனால் ஏரியில் இருந்து அதிகப்படியான நீர் வீணாக வெளியேறுகிறது.

இதனால் ஏரி நீரை நம்பியே விவசாயம் செய்து வருவோர் கவலை அடைந்துள்ளனர். மேலும் ஏரியின் மதகை சீரமைக்க நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

விவசாய பணிகள் பாதிப்பு


திருத்தணி நகரம் மற்றும் ஒன்றியத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை தொடர்ந்து மழை இடைவிடாமல் பெய்தது. இதனால் விவசாயிகள், கட்டட தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் கடும் சிரமப்பட்டனர்.

குறிப்பாக, பூ பயிரிட்ட விவசாயிகள் தொடர்ந்து துாறல் மழை பெய்து வந்ததால், செடிகளில் பூக்களை பறிக்க முடியாமல் தவித்தனர். அதே போல், சாலையோர வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர். தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us