sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நிலத்திற்கு வேலி அமைப்பு வருவாய் துறை விசாரணை

/

நிலத்திற்கு வேலி அமைப்பு வருவாய் துறை விசாரணை

நிலத்திற்கு வேலி அமைப்பு வருவாய் துறை விசாரணை

நிலத்திற்கு வேலி அமைப்பு வருவாய் துறை விசாரணை


ADDED : ஜூலை 09, 2024 10:33 PM

Google News

ADDED : ஜூலை 09, 2024 10:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் உமா, 40. இவர் தன் விவசாய நிலத்திற்கு கால்நடைகள் மற்றும் ஆட்கள் செல்லாதவாறு வகையில் தடுப்பு வேலி அமைக்க தீர்மானித்து, சாலையோரம் சிமென்ட் கம்பங்களை நேற்று நடவு செய்துக் கொண்டிருந்தார்.

தகவல் அறிந்ததும் திருத்தணி தாசில்தார் மதியழகன் உத்தரவின்படி செருக்கனுார் வருவாய் ஆய்வாளர் வித்யாலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின் சாலையை ஆக்கிரமித்து கம்பங்கள் நடவு செய்யக்கூடாது என வருவாய் துறையினர் பணியை தடுத்து நிறுத்தினர். நடப்பட்ட கம்பங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என, தெரிவித்தனர்.

இதையடுத்து உமா, தன் பட்டா நிலத்தில் தான் சாலையே செல்கிறது, சாலையை ஆக்கிரமிக்கவில்லை என அதற்கான ஆவணங்கள் காண்பித்தார். தொடர்ந்து வருவாய் ஆய்வாளர் வித்யாலட்சுமி, சர்வே செய்த பின் தான் தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us