/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மெத்தை, தலையணை கடையில் தீ விபத்து
/
மெத்தை, தலையணை கடையில் தீ விபத்து
ADDED : மார் 28, 2024 08:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி மணவாள நகர் கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் காதர்பாட்சா, 38. பாரதியார் தெருவில் மெத்தை, தலையணை தயாரிக்கும் கடை நடத்தி மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று மதியம் 3:00 மணியளவில் திடீரென தீப்பிடித்ததில், கடையில் இருந்த பெட், தலையணை தையல் மிஷின் என 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
தகவலறிந்த திருவள்ளூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
கடையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக மணவாள நகர் போலீசார் தெரிவித்தனர்.

