/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழவேற்காடில் மீனவர்கள் ஆலோசனை கூட்டம்
/
பழவேற்காடில் மீனவர்கள் ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 14, 2024 09:57 PM
பழவேற்காடு:பழவேற்காடு கடல் பகுதியில் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்களுக்கு பிரச்னை இருந்து வருகிறது. கடந்த 5ம் தேதி விசைப்படகுகளில் மீன்பிடிக்க வந்த மீனவர்கள், பழவேற்காடு பகுதி மீனவர்களை தாக்கினர்.
இதனால் பழவேற்காடில் பதற்றம் ஏற்பட்டது. மீனவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அரசு அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்தனர்.
நேற்று பழவேற்காடு மற்றும் ஆந்திர மீனவர்களின் கூட்டம், பழவேற்காடு புயல் பாதுகாப்பு மையத்தில் நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், 'பழவேற்காடு மீனவர்களை தாக்கிய விசைப்படகு மீனவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிய வேண்டும்; சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்கள் கூட்டம் நடத்த வேண்டும்; பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானங்கள் குறித்து, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில், சென்னை கோட்டையை நோக்கி பேரணி நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.