sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 16, 2025 ,ஆவணி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பழவேற்காட்டில் ரூ.10 லட்சம் மீன்பிடி வலைகள் தீக்கிரை

/

பழவேற்காட்டில் ரூ.10 லட்சம் மீன்பிடி வலைகள் தீக்கிரை

பழவேற்காட்டில் ரூ.10 லட்சம் மீன்பிடி வலைகள் தீக்கிரை

பழவேற்காட்டில் ரூ.10 லட்சம் மீன்பிடி வலைகள் தீக்கிரை


ADDED : ஜூலை 25, 2024 12:17 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 12:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழவேற்காடு:திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில், 30க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில். பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களில் ஒரு பிரிவினர் கடலிலும், மற்றொரு பிரிவினர் பழவேற்காடு ஏரியிலும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

அரங்கம்குப்பம் மீனவ கிராமத்தில் உள்ள மீனவர்கள் பாரம்பரியமாக கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். நேற்று அதிகாலை அரங்கம்குப்பம் மீனவ கிராமத்தில், மீனவர்களின் வலைகள் பாதுகாக்கப்படும் இடத்தில் திடீரென தீ கொழுந்து விட்டு எரிந்தது.

இதை பார்த்த அப்பகுதி மீனவர்கள், தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும், 10 மீனவர்களுக்கு சொந்தமான மீன்பிடி வலைகள் தீக்கிரையானது. இதன் மதிப்பு, 10 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். முன்விரோதம் காரணமாக யாரேனும் வலைகளுக்கு தீ வைத்தனரா அல்லது விபத்தா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us