sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அரசு பள்ளிக்கு 'சிசிடிவி' வழங்கிய முன்னாள் மாணவர்கள்

/

அரசு பள்ளிக்கு 'சிசிடிவி' வழங்கிய முன்னாள் மாணவர்கள்

அரசு பள்ளிக்கு 'சிசிடிவி' வழங்கிய முன்னாள் மாணவர்கள்

அரசு பள்ளிக்கு 'சிசிடிவி' வழங்கிய முன்னாள் மாணவர்கள்


ADDED : மே 07, 2024 06:39 AM

Google News

ADDED : மே 07, 2024 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் கோதண்டராமன் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அரசின் நிதியுதவியுடன் இயங்கும் இப்பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ளது.

இதில், 400க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். 2004ம் ஆண்டு, 10ம் வகுப்பு படித்த மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என, ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

பின், பள்ளிக்கு 'சிசிடிவி' கேமரா வழங்க திட்டமிட்டு, அதற்கான விழா நேற்று முன்தினம் மாலை பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளிக்கு மொத்தம், 5 'சிசிடிவி' கேமராக்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கினர்.

இதை, பள்ளி மேலாளர் மகேந்திரன், தலைமையாசிரியர் சிவப்பிரகாசம் பெற்றுக் கொண்டனர். இதில், 100க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us