ADDED : ஜூன் 15, 2024 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே பாலகிருஷ்ணாபுரம் பகுதியில், வீட்டில் வைத்து கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அங்கு, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மிதுன் டிங்கால், 36, என்பவர் வீட்டில், ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி கலால் போலீசார், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.