ADDED : ஆக 12, 2024 06:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது திருமழிசை பேரூராட்சி.
இப்பகுதியில் நெடுஞ்சாலையோரம் பழைய பொருட்கள் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக், இரும்பு போன்ற கழிவு பொருட்கள் கடை உள்ளது.
இந்த கடை முன் சாலையோரம் குப்பை குவிந்து வருகிறது.
மேலும் பழைய இரும்புக்கடையில் உள்ள கழிவு பொருட்களும் குப்பையுடன் சேர்ந்து குவிந்து வருகிறது.
இதனால் ஏற்படும் துர்நாற்றத்தில் இவ்வழியே வாகனங்களில் செல்வோர் மற்றும் பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருவதாக நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகத்தினர் நெடுஞ்சாலையோரம் குப்பையை அகற்ற பிளீச்சிங் பவுடர் துாவி பழைய இரும்புக்கடை உரிமையாளரிடம் எச்சரிக்கை விடுத்தனர்.