sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அரசு உயர்நிலைப்பள்ளி கட்டடப்பணி ஜவ்வு

/

அரசு உயர்நிலைப்பள்ளி கட்டடப்பணி ஜவ்வு

அரசு உயர்நிலைப்பள்ளி கட்டடப்பணி ஜவ்வு

அரசு உயர்நிலைப்பள்ளி கட்டடப்பணி ஜவ்வு


ADDED : ஜூலை 21, 2024 06:49 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 06:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம், பெரியகளக்காட்டூர் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி, 35 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

இப்பள்ளியில் தற்போது, 95 மாணவ- மாணவியர் பயின்று வருகின்றனர். 35ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இப்பள்ளியின் கட்டடம், 2019ம் ஆண்டு பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்ததால் அக்கட்டடத்தை இடித்து அகற்றி புதிய கட்டடம் கட்டுவதற்கு அரசு முடிவு செய்து, 2021ல் 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மாணவர்களின் நலன் கருதி பள்ளி அதே கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

தற்போது கட்டடப் பணி மூன்றாண்டு களாக ஜவ்வாக இழுப்பதால் பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மேலும் வகுப்பறை கட்டடம் இல்லாததால் தங்கள் பிள்ளைகளை இப்பள்ளியில் சேர்ப்பதை தவிர்ப்பதாகவும், இதனால் 20 கி.மீ., தொலைவில் உள்ள திருவள்ளூர், அரக்கோணம் நகரில் உள்ள பள்ளிக்கு அனுப்பும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பள்ளி கட்டடத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் ஒருவர் கூறுகையில், 'பள்ளி கட்டடப்பணி 80 சதவீதம் முடிந்துள்ளது. விரைவில் பயன்பாட்டுக்கு வரும்' என்றார்.






      Dinamalar
      Follow us