ADDED : மார் 07, 2025 02:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி ஆலமரம் தெருவில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் நடுநிலைப் பள்ளியில் நேற்று ஆண்டு விழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியை சுமதி தலைமை வகித்தார். இதில், திருத்தணி வட்டார கல்வி அலுவலர்கள் மேரி ஜோஸ்வின், சலபதி, நகர்மன்ற கவுன்சிலர் ரேவதி, திருத்தணி வருவாய் ஆய்வாளர் கணேஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
பள்ளி அளவில் நடந்த தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர்கள் பரிசுகள் மற்றும் சான்றுகள் வழங்கி பாராட்டினர். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.