ADDED : ஜூலை 23, 2024 08:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே அரும்பாக்கம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் குட்கா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ஆரம்பாக்கம் போலீசார் நேற்று அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அங்குள்ள ஒரு வீட்டில், பதுக்கி வைத்திருந்த, ஐந்து கிலோ எடை குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
பதுக்கிய கார்த்திக், 20, என்பவரை கைது செய்தனர். ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.