ADDED : பிப் 27, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:தச்சூரில் டீக்கடையில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
கவரைப்பேட்டை அடுத்த, தச்சூர் பகுதியில், போலீசாரும், உணவு பாதுகாப்பு துறையினரும் இணைந்து கடைகளில் சோதனை நடத்தினர்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சிவா, 40, என்பவருக்கு சொந்தமான டீக்கடையில், விற்பனைக்கு வைத்திருந்த, 445 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
சிவா மீது கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

