sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கத்திரி வெயில் துவக்கம் சுகாதார துறை 'அட்வைஸ்'

/

கத்திரி வெயில் துவக்கம் சுகாதார துறை 'அட்வைஸ்'

கத்திரி வெயில் துவக்கம் சுகாதார துறை 'அட்வைஸ்'

கத்திரி வெயில் துவக்கம் சுகாதார துறை 'அட்வைஸ்'


ADDED : மே 03, 2024 08:48 PM

Google News

ADDED : மே 03, 2024 08:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:கத்திரி வெயில் இன்று துவங்க உள்ள நிலையில், வெப்ப அலை வீசும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வரவேண்டாம் என, சுகாதார துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக வழக்கத்தை விட வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், ஆண்டுதோறும் உருவாகும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தாக்கம் இன்று துவங்குகிறது.

இதன் தாக்கம், வரும், 24 வரை இருக்கும்.

எனவே, வெப்பத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ள கீழ்க்காணும் வழிமுறைகளை கடைபிடிக்குமாறு, சுகாதார துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.

l சாறு நிறைந்த பழங்களை அதிக அளவில் உட்கொள்ளவும். தாகம் வரும் வரை காத்திராமல் அடிக்கடி தண்ணீர் பருகவும்

l அடிக்கடி குளிர்ந்த நீரில் குளிப்பது நலம்

l காற்றோட்டமான மெல்லிய பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்

l வீட்டிலிருந்து வெளியில் செல்லும் போது கண்ணாடி, குடை, காலணி அணிந்து செல்ல வேண்டும்

l தவிர்க்க இயலாத சூழ்நிலையில் வெளியே செல்லும் போது குடிநீர் எடுத்துச் செல்வதுடன் தலை, கழுத்து மற்றும் கைகளை சிறிது ஈரமான துணியினால் மூடி செல்ல வேண்டும்

l வீட்டில் தயாரிக்கப்படும் மோர், அரிசி கஞ்சி, எலுமிச்சை பழச்சாறு, மற்றும் லஸ்ஸி ஆகிய குளிர்பானங்களை அருந்த வேண்டும்

l கால்நடைகளை நிழலான இடங்களில் தங்க வைப்பதோடு, அவற்றிற்கு தேவையான அளவு தண்ணீரை வழங்கிட வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை


l பொதுமக்கள் அவசிய தேவையின்றி வெயிலில் செல்ல வேண்டாம். குறிப்பாக காலை 11:00 மணி முதல் பிற்பகல் 3:00 வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்

l சர்க்கரை அதிகமுள்ள திரவங்களையும், மிக குளிர்ந்த பானங்களை அருந்துவதையும் தவிர்க்கவும்

l குழந்தைகள் மற்றும் செல்ல பிராணிகளை வாகனம் நிறுத்தும் இடங்களில், வாகனங்களில் விட்டு செல்ல வேண்டாம்.

இவ்வாறு சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us