/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடிப்பூண்டியில் ஐ.டி.ஐ., சேர்க்கை
/
கும்மிடிப்பூண்டியில் ஐ.டி.ஐ., சேர்க்கை
ADDED : மே 16, 2024 12:50 AM
கும்மிடிப்பூண்டி:தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக, கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இந்த கல்வி ஆண்டுக்கான சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.
குளிர்சாதன டெக்னீசியன், மெக்கானிக், சர்வேயர், இன்-பளான்ட் லாஜிஸ்டிக்ஸ் அசிஸ்ட்டன்ட் ஆகிய நான்கு தொழிற் பிரிவுகளில் பயிற்சி வழங்கப்படும்.
பயிற்சிக் காலத்தில் ஊக்கத்தொகை மட்டு மின்றி மிதிவண்டி, மடிக்கணினி, சீருடை, காலணிகள், பாட புத்தகங்கள், வரைபட உபகரணங்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்ததும் வேலைப்வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றுடன், மாற்றுச்சான்று, ஆதார் அட்டை, ஜாதி சான்று, ஆறு புகைப்படங்களுடன் நேரடியாகவும், www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.