sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மாநில மினி மாரத்தான் கிருஷ்ணா கல்லுாரி அபாரம்

/

மாநில மினி மாரத்தான் கிருஷ்ணா கல்லுாரி அபாரம்

மாநில மினி மாரத்தான் கிருஷ்ணா கல்லுாரி அபாரம்

மாநில மினி மாரத்தான் கிருஷ்ணா கல்லுாரி அபாரம்


ADDED : செப் 01, 2024 11:07 PM

Google News

ADDED : செப் 01, 2024 11:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சமூக நலன் மற்றும் மகளிர் அதிகாரம் துறை சார்பில் மாநில அளவிலான மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

போட்டிகள் செங்கல்பட்டு சப் - கலெக்டர் விளையாட்டு திடலில் நடந்தது. இதில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்தோர் பங்கேற்றனர். ஆடவரில் 300க்கும் மேற்பட்டோரும், மகளிரில் 200க்கும் மேற்பட்டோரும் பங்கேற்றனர்.

இதில், மகளிரில் காஞ்சிபுரம் மாவட்டம் கீழம்பியில் உள்ள காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை, முதலாமாண்டு மாணவி சி.வினிதா முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் வென்றார்.

ஆடவரில், காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தமிழ்த்துறை முதலாம் ஆண்டு மாணவர் வி.சுரேஷ் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

மினி மாரத்தானில் அசத்திய மாணவ - மாணவியரை கல்லுாரி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us