sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணி முருகன் கோவிலில் கிருத்திகை விழா கோலாகலம்

/

திருத்தணி முருகன் கோவிலில் கிருத்திகை விழா கோலாகலம்

திருத்தணி முருகன் கோவிலில் கிருத்திகை விழா கோலாகலம்

திருத்தணி முருகன் கோவிலில் கிருத்திகை விழா கோலாகலம்


ADDED : ஜூன் 06, 2024 02:00 AM

Google News

ADDED : ஜூன் 06, 2024 02:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், நேற்று வைகாசி மாத கிருத்திகை விழாவை ஒட்டி, அதிகாலை 4:30 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து மூலவருக்கு தங்கவேல், தங்கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.

காலை 9:00 மணிக்கு உற்சவர் முருக பெருமானுக்கு காவடி மண்டபத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது

இரவு 7:00 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் உற்சவர் முருகப்பெருமான் வெள்ளிமயில் வாகனத்தில் எழுந்தருளி, தேர்வீதியில் வலம் வந்தார்.

நேற்று வைகாசி கிருத்திகை விழா, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் மூலவரை தரிசிக்க குவிந்தனர். சில பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற அலகு குத்தியும், காவடிகள் சுமந்து வந்தும் நேர்த்தி கடனை செலுத்தினர். இதனால், மூலவரை தரிசிக்க மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us